Thursday, 29 September 2011

முதல் நாடி

சென்ற இதழில் நாடி காண்பதற்க்குகூட அவர்கள் அருள் வேண்டுமென்று கூறியிருந்ததுபோல், சிவரூபமான சித்தராகிய ஸ்ரீஅகஸ்த்திய மஹாரிஷியின் நாடி முதன்முதலில் எனக்கு சென்னை, சாலிகிராமத்தில் திரு.கலியமூர்த்தி அவர்களின் தவப்புதல்வன் திரு.பாலரிஷி (எ) பாலமுருகன் வாயிலாக 05/04/2000 அன்று கிடைத்தது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று.

பொதுகாண்டம் - ஹரிஹரன் - 05/04/2000.

(நல்ல பெற்றோர்க்கு இடைமகனாய் பிறந்து, இதை காணுகின்ற வேளையில் அன்னை மட்டும் தீர்க்கமாக உள்ளார். கூடப்பிறந்தவர்கள் ஐந்து ஆண்மகன்களும், மூன்று பெண்களுமாக இருந்து, அதில் நான்கு சகோதர்களுக்கும் மூன்று சகோதரிகளுக்கும் திருமணமாகிவிட்டது. இதை காணும் பொழுது, எனக்கு திருமணமாகி ஆண்குழந்தை ஒன்று உண்டென்றும், அரசாங்கத்தில், இரயில்வே துறையில், எழுத்து மார்க்கமான பணிபுரியும் என் பெயர் ஹரிஹரனும், அம்மாவின் பெயர் இலட்சுமி, தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் மனைவி ஸ்ரீஉமா என்றும் அற்புதமாக கூறி, இதை நான் எனது முப்பத்திமூன்றாவது வயதில் காணவேண்டுமென்பது விதியென்றார்.)
... யோகமுள பெருநகர சார்ந்த இன்பம்
ஈடில்லா வளர்ச்சியதும் பெண்சேய்தோன்றும்...


(பெருநகரத்தில் (சென்னை) வசிப்பேனென்றும், பெண்குழந்தை உண்டுமென்றார் - அவரது கூற்றுப்படி எங்களுக்கு 2001ம் வருடம் பெண்குழந்தை பிறந்தது)

... உயர் இல்லாள் எழுபானீர் மூன்றும்ஐந்தில்
தப்பில்லா இல்லவளும் முன்னேமோட்சம்....

(எனது மனைவி எழுபத்து மூன்று வயது காலம் வரை சிறப்பாக வாழ்ந்து, எனக்கு முன்னே மோட்சம் பெறுவாள் என்று கூறியுள்ளார்)

ஹரிஹரன் - 14/10/2002

... அஞ்சிவரும் ஈராண்டின் முன்புதானே
அரும்பாடு ருணத்தோடு கணிணிகல்வி
கல்விகற்று சிங்கமுக தேசம்சென்று
கண்டமதில் தப்பித்து இவனின் இல்லாள்
நல்தவத்தின் அருளாலே ருணத்தைதந்து ....

(கடந்த 2000 வருடம் கட்டிடவியல் பொறியாளரான நான், ஜாவா கணினி கல்வி பயின்று, சிங்கப்பூர் சென்று, அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்த்த நேரத்தில், கணிணிதுறை சரிந்த நிலையில் சுமார் ஒரு இலட்சம் செலவுடன் இந்தியா திரும்ப நேர்ந்ததை குருமுனி அவர்கள் நல்தவத்தின் அருளால், மனைவிக்கு வரவேண்டிய கண்டத்தை தவிர்ப்பதற்காக ருணத்தை (கடனை)கொடுத்தோம் என்றார்.. என்னே அவரின் கருணை...)


... மேறுவுடன் பிலவங்க ஆனித்திங்கள்
 மால்வாரம் இருபானெட் பூரம்சார்மீன் ....

(எனது வலதுகை பெருவிரல் அடையாளத்தின் மூலம் பல நாடி கட்டுகளை தேடியபின் கிடைத்த எனது நாடிகளிருந்து வந்த வரிகளின் விளக்கமானது - நான் பிறந்தது பிலவங்க வருடம் ஆனி மாதம் 28ம் நாள் பூரம் நஷத்திரம் என்பதனை நான் கூறாமலேயே எனக்குக் கூறியது என்னை ஆச்சரியபட வைத்தது.)

... வண்ணமதாய் நல் ஈன்றோர்க்கு இடையின்சாயல்
வளமான அன்னைமட்டும் தீர்க்கம்இந்நாள்

தீர்க்கமுள ஆண்பஞ்சம் சூலம்பெண்ணும்
திருமணமும் வேதமது பெண்ணும்கண்டு
பார்க்கவரும் மகன்மன்றல் ஆண்சேய்ஒன்று
பாலகனும் இறைதொண்டு எழுத்துப்பார்வை
பார்வையுடன் தொடர்ந்தோடும் வாகனத்தில்
பணிசிறப்பு சுயதேட்டு சிந்தைகூட
தீர்வாகும் ஹரிஹரனே மகனின் நாமம்
தெரியத்தாய் இலக்குமியும் அம்மாளாக
ஆகத்தன் வெண்ணையுண்ட மூர்த்தியாக
அழகு இல்லாள் திருமுன்சொல் உமாவின் நாமம்
சோகமிலா நூல்நோக்கம் முப்பான்மூன்றில்......

1 comment:

  1. Iraivanai unarthaal vazhkaiyil nadakkum ovvoru vishayamum ascharyamum athisayamum thaan.Thangalin vazhkaiyil nadandhavaighal matravargalukku vazhikaatiyaga irukka Gurumuni-yai prarthikkiren.Nanri

    ReplyDelete