Tuesday, 27 September 2011

நாடி



தெந்திசை உயர்ந்ததென்று
தாழவைக்கத் தானமர்ந்து
சிவய நமசிவ வென்று
பொதிகை மலையிருந்து-பரம்
பொருளின் பூரணத்தை
பாடலுக்குள் உணர்த்தி
வைத்த குறுமுனியே
அகத்தியனே!
உமைக் குருவெனவே
தாழ்பணிந்து தொழுகின்றேன்! 
உடனிருந் தருளிடுவாய்!

"ஐயனை நாடி"...... 
 (சிவகிரியாம் சதுரகிரியின் ஆனந்த அனுபவத்தோடு .... ஞானத்தைத் தேடிய ஆத்மாவின் உள்ளத்தின் வார்த்தைகளை.. மஹாளயபக்ஷ அமாவாஸையில் எழுததூண்டிய குருவிற்கு முதல் வணக்கம்)

முன்னுரை:
 "அரிது, அரிது மானிடராய் பிறத்தலரிது - மானிடரின் கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அதனின் அறிது - என்ற வரிகளுக்கேற்ப - இப்பூவுலகில் என்னை மானிடனாக வடிவமைத்த இறைசக்திக்கு முதல் வணக்கம்.  ஐயனை நாடி என்கிற தலைப்பில் என்னை எழுத வைத்த, சிந்தையில் குடிகொண்டு நல்லோர்களை நல்வழிபடுத்திக் கொண்டிருக்கும் தலையாய சித்தரும் - சிவரூபமான ஸ்ரீ லோபாமுத்ர ஸஹித ஸ்ரீ அகஸ்தியமஹா ரிஷிக்கு சிரம் தாழ்ந்த பல கோடி வணக்கங்கள்.  இந்நூலை, எனை பத்துத் திங்கள் சுமந்து, தான் சேர்த்த புண்ணியங்களை எனக்காக அர்ப்பணித்த - "தாயிற் சிறந்த கோயிலுமில்லை" என்ற வரிகளின் அர்த்தத்தை எனக்கு உணர வைத்த நடமாடும் தெய்வமாகிய - எனது தாய்க்கும், வேதகிரி என்கிற சதுரகிரியில் மகாலிங்கசுவாமியின் முழு ஆசி பெற்ற - ஈசசங்கோன் என்று குருமுனியால் அழைக்கபெற்று, இன்றளவும் குருமுனியின் ஆசியோடு என்னை நல்வழிபடுத்திக் கொண்டிருக்கும் அன்னதான சித்தராகிய ஸ்ரீசிவசங்கு ஐயாவிற்கும் நன்றியுடன் காணிக்கையாக்குகிறேன். 

ஸ்ரீ அகஸ்த்தியர் காயத்ரி
"ஓம் அகஸ்த்தீஸ்வராய வித்மஹே
பொதிகை ஸஞ்சாராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரஸோதயாத்!"

ஸ்ரீ ஈசசங்கோன் காயத்ரி
"ஓம் அன்னதாதாய வித்மஹே
பரப்ரஹ்மனேய தீமஹி
தந்நோ ஈசசங்கோன் ப்ரஸோதயாத்!"

குறிப்பு: இந்நூல் சுயசரிதையோ அல்லது விளம்பரமோ அல்ல. மாறாக, கதைகள் மூலம் நாம் அறிந்ததைக் காட்டிலும், நேரில் நடந்தவற்றை, ஆதாரத்துடன் விளக்குவது, தேடுதலை உணரமுடியும் என்பதற்காகவே! இது பக்குவபட்டு ஞானத்தைத் தேடுகின்ற ஆத்மாக்களுக்கு சொந்தமானதாகும். இந்நூல் நாடி ஜோதிடத்தின் மூலம் குருமுனி எனக்கு கூறிய எதிர்கால பலன்களும், அதன்மூலம்  நான் அனுபவித்த ஆனந்தமும் அடங்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்ர ஸஹித ஸ்ரீ அகத்தீஸ்வராய நம:
(நாடி ஜோதிடம் - 22/03/2011 அன்று மாலை 8:30 மணியளவில் குருமுனி கூறிய வரிகளிருந்து....)
..... அன்னையருள் கொண்டமைந்தன் வாழ்விற்காக
அறிவிப்பேன் சூட்சமங்கள் அறியும்காலம்
இன்முகமாய் ஈசஹரியோன் உமையாளோடு
எடுத்துரைப்பேன் சாட்சியோடு எண்ணாவண்ணம்
வண்ணம்மேல் பலனுரைக்கும் காலம்தன்னில்
வழிபடுத்த மகன்செயலில் எமதுசிந்தை
வின்னமிலா இல்லவளின் ஆரோக்கியங்கள்
வளமோடு பிணிநீங்கி அருளைதந்தோம்
தந்ததோடு தன்வாழ்வு அனுபவத்தை
தனைஅறியா மாந்தர்க்கும் நன்குஉணர
சுந்தரமாய் வழிவகுத்தோம் ஞானசிந்தை
சூழ்ந்திடவே சதுரகிரி ஈசன் ஆசி

ஆசிதுணை  ஆளுகின்ற ப்ரத்தியங்கரே
அரவணைப்பாய் மிகைவெற்றி மகன்முயற்சி ....

(விளக்கம்: அன்னை பார்வதிதேவியின் அருளை கொண்ட மைந்தன், சூட்சமங்களை அறியும் காலம், தன் இல்லாள் உமாவோடு காணவந்துள்ளதை சாட்சியாக கூறி - காணுகின்ற வேளையில் மகன் மனதில் எமது சிந்தையை கொடுத்து, இல்லவளின் பிணியை(புற்றுநோய்) நீக்கி ஆரோக்கியங்களுடன் அருளை தந்தோமென்றார். மேலும் தன் வாழ்வு அனுபவத்தை, மாந்தர்கள் அறிந்து கொள்வதற்காக நூலாக மாற்றும் சிவஹரிஹரனுக்கு ஞானசிந்தையை கொடுத்து, சதுரகிரி ஈசனின் ஆசியும், இவ்வுலகை ஆளுகின்ற ப்ரத்தியங்கரா மாகாளியின் ஆசியும் உண்டென்று கூறினார். இந்நூலை எழுதுவதற்கு ஆசிகள் கொடுத்த, எல்லாம் வல்ல அவர்களின் திருவடிகளில் சமர்ப்பித்து, ஆனந்தத்துடன் சரணடைகிறேன். ) 

ஆன்மீகம்: உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியையும் உள்ளடக்கியது பிரபஞ்ச சக்தி. பஞ்சபூதங்களும் அதனுள் அடக்கம். பஞ்சபூதங்கள் இல்லையேல் எந்த சஞ்சாரமுமில்லை. இதுவே உலக நியதி. ஆத்மா (எ) ஆன்மா என்பது பிரஞ்ச சக்தியால் படைக்கப்பட்டதாகும். அதற்கு உருவம் கிடையாது. எதனுள் இருக்கின்றதோ அதுவாகவே மாறிவிடும் ஆற்றல் பெற்றது. ஆன்மீகமென்பது சக்தியால் படைக்கபெற்ற ஒரு அருமருந்து. அதை சுவைக்கத் தெரிந்தால், ஆனந்தத்தை உணரலாம். மதத்தின் அடிப்படையில், பல பெயர்கள் பெற்றிருந்தாலும், குணத்தாலும் கொள்கையாலும் ஒன்றே.

இறைவன் நம்மை படைக்கும்பொழுது, நம் கர்மவினைகளிருந்து மீள்வதற்கு நல்பாதையை காட்டியுள்ளார். சித்தர்கள், ரிஷிகள் மற்றும் ஞானிகள் மூலமாக ந்மக்கு அதை உணர்த்திக் கொண்டிருக்கிறார். சித்தத்தை(மனதை) சித்தபட(ஒரு நிலைபடுத்துதல்) வைத்தால், சித்தத்தை(சித்தரை) உணரமுடியும்.

நாடி ஜோதிடம் என்பது, நம்மை நல்வழிபடுத்துவதற்காக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே - சித்தர்களாலும், ரிஷிகளாலும் ஓலைக்சுவடியின் வாயிலாக எழுதி வைக்கப்பட்ட அற்புத மருந்து. பூர்வீகம் வைத்தீஸ்வரன்கோவிலாக இருந்தாலும், இன்று நாடெங்கும் கிளைகள் உள்ளன. அதை பார்ப்பதற்குகூட நமக்கு அவர்களின் அருள் இருந்தால்தான் கிடைக்குமென்பது முற்றிலும் உண்மை.


நன்றியுடன்,

(சிவஹரிஹரன்.)
ஆனந்தம் தொடரும் வரை சிறிது ஓய்வெடுக்கவும்......


Disclaimer & Privacy Policy


Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to sivahariharan2007@gmail.com

1 comment:

  1. Thanghal naadi-yai paathiyil niruthiviteerghal??????

    ReplyDelete