Wednesday 9 November 2011

பிரபஞ்ச ரகசியம்

எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
(நன்றியுடன் livingextra.com)

கடவுள் ஒருவனே , என்கிறது பிற மதங்கள். ஆனால், இந்து மதத்தில் மட்டும் எதற்கு இத்தனை கடவுள்கள் , என்கிற கேள்வி நம் எல்லோர் மனத்திலும் நிகழும். மும் மூர்த்திகள் என்று கருதப்படுபவர்கள் கூட , ஒரு யோக நிலையில் இருப்பது போல நாம் எத்தனை படங்களில் பார்த்து இருக்கிறோம். அவர் யாரை எண்ணி தவம் செய்கிறார். மும்மூர்த்திகளுடன் . சதாசிவம், ருத்ரன், என்று - ஐந்து மூர்த்திகள் இருக்கின்றனராம்.
உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய அந்த கடவுள் ஒன்று தான். அவரைத்தான் சிவனும் , யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே. மீதி நாம் வணங்கும் அனைவரும், தேவதைகள் , தெய்வங்கள் - அவதாரங்கள் , ஒரு சில காரண , காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள். சித்தர்களுக்கு மேல் இருக்கும் உயர்ந்த நிலை , இந்த தெய்வங்கள்.
முருகனும், விநாயகரும் கூட - சித்தர்கள் போன்று வாழ்க்கை நடத்தி, பின் சிவனின் மைந்தனானவர்கள் என்கின்றனர். பலப்பல யுகங்கள் கடந்து , நாமும் இறைநிலை அடைய விருக்கிறோம். அதை இன்றிலிருந்தே தொடங்குவது , நமக்கு இன்னும் நல்லது.
 
எப்படி இறைவனுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றனவோ, அதே போல மனிதர்களுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒரு பெரிய தொழிற்சாலை இருப்பதாக எடுத்துக்கொள்வோம். நாமெல்லாம் தொழிலாளர்கள். நம்மை சூப்பர்வைஸ் செய்ய - நவ கிரகங்கள். நவ கிரகங்கள் - பக்காவாக நம்மை கண்காணித்து , நம்மை வேலை வாங்குகின்றன. பஞ்ச பூதங்களை - ரா மெட்டீரியலாக கொண்டு , பஞ்ச பூத கலவையாலான அந்த உடலைக் கொண்டு இந்த பிரபஞ்ச தொழிற்சாலை இயங்குகிறது.

இந்த சூபர்வைசர்களுக்கு மேலே மேலாளர்கள். அவர்களுக்கும் மேலே - பொது மேலாளர்கள் . அவர்களையும் இயக்குவது இயக்குனர்கள். அந்த இயக்குனர்களுக்கும் மேலே - சேர்மன் என்கிற முதலாளி.

செய்யும் வேலை , திறமை , அவர்கள் செய்து முடிக்கும் திறன் , என்று ஒவ்வொருவரின் உழைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உழைக்க வேண்டும். அதாவது , வாழ வேண்டும் - வாழ்ந்து அவரவர் கடமையை செய்ய வேண்டும். இப்படியே , ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த நிலை தீர்மானிக்கப் படுகிறது. ஒரு செக்சனிலிருந்து , மற்றொரு பிரிவுக்கு அவர் மாற்றப்படுவர். நல்ல திறமையுடன், நல்லவராக இருந்தவருக்கு - அடுத்த பிரிவு , கொஞ்சம் மேன்மையானது

இந்த அப்ரைசல் தான் - மரணம் , அடுத்த பிறவி. நீங்கள் திரும்ப உழைப்பதற்கு வசதியாக , திரும்ப இளமை கிடைக்கிறது. மோசமான வேலை செய்தவர்களுக்கு - கடினமான செக்க்ஷனும் கிடைக்கும்.
நீங்களே ஒண்டியா, தனித்தனியே வேலை செய்ய முடியாததால் - உங்களுடன் இணைந்து செயலாற்ற உங்கள் குடும்பம் , நண்பர்கள் , சமுதாயம் என்று ஒரு குழுவே இருக்கிறது.

குடும்பத்தில் யாரோ ஒருவர் , ஓவராக ஆட்டம் போட்டாலும், திடு திப் பென்று ( அகால மரணம்) டிபார்ட்மென்ட் மாற்றமும் நிகழும். இதனால் , அவரும் பாதிக்கப் படுகிறார். அந்த குடும்பமும் வேலைப் பளுவால் முழி பிதுங்கும்.

இவை அத்தனையும் சமாளித்து , நரை மூப்பெய்தி - என்னை கூட்டிக்கோப்பா என்று , நீங்கள் எழுப்பும் ஒரு மன ஓலம் , உங்களுக்கு அடுத்த கதவை திறக்க வைக்கும்.


நீங்கள் கதவு திறந்து , அடுத்த அறைக்கு வந்ததும், அதே சூப்பர்வைசர்கள். அவர்களுக்கு தெரியும், நம்மோட அருகதை. இதில், பாரபட்சம் பார்க்காது - நமக்கு கிடைக்க வேண்டிய கூலியை , அவர்கள் மேலிடத்திலிருந்து நமக்கு கிடைக்க செய்கின்றனர்.

ஒரு ப்ரோமோஷன் கொடுக்கும் முன், உங்கள் சகல திறமையும் பரிசோதிப்பது போல - உங்களுக்கு பலப்பல கஷ்டங்கள், சோதனைகள் வைக்கப்படுகின்றன. இதிலும் தாக்குப் பிடித்து , உங்கள் அணியிலுள்ள சக தொழிலாளர்களையும் அரவணைத்து , உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்க வேண்டும்.

உங்கள் அணியிலும், சமூகத்திலும் , ஒருவர் மனம் கூட கோணாது , அவர்களுக்கும் ஒத்தாசை செய்து , ஒரு குழுவாக கூடி - உங்கள் கடமையை செய்து முடிக்கவேண்டும். அவர்களை பகைத்துக் கொண்டால், சமயத்தில் சொதப்பிவிடுவார்களே.


உங்களை நீங்கள் , உங்கள் ஆன்ம ஒளியை உணர்ந்து கொள்ளுதல் தான் - முதல் படி. உங்கள் பலம் என்ன வென்று அதன் பிறகுதானே உணர முடியும்? ஹனுமனை போல நீங்களும் கடலை தாண்ட முடியும். மலையையும் தூக்க முடியும்.

உலகம் ஒரு நாடக மேடைதான். அந்த இறைவன் இயக்குகிறான். திறமையாக , நடித்தால் - நீங்களும் ஒரு நாள் ஹீரோ வைக்கலாம். இல்லையெனில், சாதாரண துணை நடிகர் தான். ஒரு நாடகம் முடிந்ததும் , அடுத்த நாடகம் ஆரம்பிக்கும். அப்போது ஹீரோவும், இரண்டாம் நிலைக்கு தள்ளப்படலாம், தனது பொறுப்பை உணர்ந்து ஜொலிக்காவிடில்.

..நமது பிறப்பின் நோக்கம் என்ன, நாம் எந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் என்பது மிக முக்கியம்.


இப்போது நாம் எங்கு இருக்கிறோம் ? நமக்கு ஏன் இத்தனை தெய்வங்கள் என்று புரிகிறதா? எப்படி சூரியனிலிருந்து - தெறித்து வந்த , உஷ்ணத் துளிதான் பூமி என்று விஞ்ஞானம் நிரூபித்ததோ, அதைப் போல ஏராளமான சூரியன்களும் இருப்பது உண்மையோ, அந்த பிரபஞ்சத்திற்கும் மூலப் பொருள் ஒன்று இருக்கும். அந்த மூலத்திலிருந்து வெளியான , துகள்களின் , அணுக்களில் , அணுக்களில் உள்ள அணுதான் , நாம் அனைவரும்.

என்னில் உள்ள அந்த ஜீவ ஒளி தான் , உங்களிலும் உள்ளது. நம் அனைத்து உயிர்களிலும் உள்ளது. இயற்கையிலும் உள்ளது.

எனவே , ஜாதி மத . இன துவேஷத்தை மறப்போம். சக மனிதர்களை நேசிப்போம். இயற்கையை ஆராதிப்போம். நம் வாழ்வாதாரத்தை வணங்குவோம். குழந்தைகளையும், திறமை இல்லாதவர்களையும், வழி நடத்துவோம். நாம் அனைவரும் கடவுளாவோம்.

அடி மனத்தில் பரவும் எண்ணம், எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறையாது. முதலில் நம் மனம் முழுவதும் நல் எண்ணங்களால் நிறையட்டும்.

பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம். பிற உயிர்களை கொன்று புசிக்க வேண்டாம். நடந்தவை மறப்போம். இனியும் மனதறிந்து எந்த பாவமும் செய்யாமல் , நிம்மதியாக வாழ்வோம்.


தோல்விகளை கண்டு துவளாத மனமும், வெற்றிகளைக் கண்டு மமதை கொள்ளாத மனப் பக்குவமும், கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனப் பக்குவமும், வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் !

கீழே , சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். முயன்று பாருங்கள்... மனிதம் வளர்ப்போம் !


காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர் செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்நோய் தீர-ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்திவீடும், நிலமும் பெற-ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்ஆயுள், ஆரோக்கியம் பெற-ருத்திரன்மனவலிமை, உடல் வலிமை பெற-ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்கல்வியில் சிறந்து விளங்க-ஸ்ரீ சரஸ்வதிதிருமணம் நடைபெற-ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கைமாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரிபுத்திர பாக்கியம் பெற-சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமிதொழில் சிறந்து லாபம் பெற-திருப்பதி வெங்கிடாசலபதிபுதிய தொழில் துவங்க-ஸ்ரீகஜலட்சுமிவிவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமிஉணவுக் கஷ்டம் நீங்க-ஸ்ரீ அன்னபூரணிவழக்குகளில் வெற்றி பெற-விநாயகர்சனி தோஷம் நீங்க-ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்பகைவர் தொல்லை நீங்க-திருச்செந்தூர் முருகன்பில்லி, சூன்யம், செய்வினை அகல-ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற-சிவஸ்துதி
நோய் தீர
முடி நரைத்தல், உதிர்தல்-மகாலட்சுமி, வள்ளிகண் பார்வைக் கோளாறுகள்-சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்காது, மூக்கு, தொண்டை நோய்கள்-முருகன்ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்-மகாவிஷ்ணுமாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கைஅஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா-தட்சிணாமூர்த்தி, முருகன்நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு-முருகன்பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்-ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளிமூட்டுவலி, கால் வியாதிகள்-சக்கரத்தாழ்வார்வாதங்கள்-சனிபகவான், சிவபெருமான்பித்தம்-முருகன்வாயுக் கோளாறுகள்-ஆஞ்சநேயர்எலும்பு வியாதிகள்-சிவபெருமான், முருகன்ரத்தசோகை, ரத்த அழுத்தம்-முருகன், செவ்வாய் பகவான்குஷ்டம், சொறி சிரங்கு-சங்கர நாராயணன்அம்மை நோய்கள்-மாரியம்மன்தலைவலி, ஜீரம்-பிள்ளையார்புற்று நோய்- சிவபெருமான்ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு

மனிதப்பிறவி

மனிதப் பிறவியின் நோக்கம் என்ன ?
(நன்றியுடன் livingextra.com)

மனிதனாகப் பிறந்தவனுக்கு பலவித சுக, துக்கங்கள் உண்டு. இவைகளை அனுபவித்தே ஆக வேண்டும். இப்படி அனுபவிப்பதற்காகவே ஏற்பட்டதுதான் மனைவி, மக்கள், குடும்பம் எல்லாம். இவைகளெல்லாம் இல்லை என்றால், அவனவன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு போய் விடுவான். அதனால் தான், மனிதனை சம்சார சாகரத்தில் சிக்க வைக்கிறார் பகவான். ஆனால், இதில் சிக்கிக், சுற்றிச் சுற்றி எவ்வளவு காலம் தான் வருவது? இதிலிருந்து மெதுவாக கழன்று, விடுதலை பெற்று பகவானை அடைய முயற்சி செய்ய வேண்டாமா? இந்தப் பிறவிப் பிணியைப் போக்கிக் கொள்ள வேண்டாமா?

பகவானை அடைவது அவ்வளவு சுலபமல்ல. ஆசாபாசங்கள் மனிதனை, பகவான் பக்கம் போக விடாமல் இழுக்கிறது; அதையும் மீறித் தான் போக வேண்டும். ஒரு ஜென்மாவில் இல்லா விட்டாலும், அடுத்தடுத்து வரும் ஜென்மாக்களிலும், இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

ஒருவன் ஒரு ஊருக்குப் போகப் புறப்படுகிறான். ஒரு நாளைக்கு 10 கி.மீ., நடக்கிறான். இருட்டி விட்டது. அந்த ஊரில் இரவு தங்கி, மறுநாள் காலையில் நடக்க ஆரம்பிக்கிறான். மறுபடியும் ஒரு 10 கி.மீ., தூரம் நடந்து, இன்னொரு இடத்தை அடைகிறான். அங்கே தங்கி, மறுநாள் நடக்க ஆரம்பிக்கிறான். இப்படி சில நாட்கள் நடந்து, நடந்து ஒருநாள் இவன் போக வேண்டிய இடத்தை அடைந்து விடுகிறான்.

அதுபோல, பகவானை அடைய, நற்கதி பெற ஒரே ஜென்மாவில் முடியாது. அடுத்தடுத்த ஜென்மாவிலும், இடைவிடாமல் முயன்று கொண்டே இருந்தால், ஏதோ ஒரு ஜென்மாவில் இந்தப் பிறவிப் பிணி தொலைந்து, அவனை அடைந்து விடலாம்.

அப்படி இல்லாமல், முதல் நாள் 10 கி.மீ., நடந்து, மீண்டும் வீட்டுக்கே திரும்பி வந்தால், இவன் போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேர மாட்டான். அதுபோல, குடும்ப பாசங்களிலிருந்து விடுபட்டு பக்தி செய்து கொண்டே ஒவ்வொரு ஜென்மாவை கடந்து, காலம் வரும்போது அவனடி சேர வேண்டும்.
வண்டியில் கட்டிய மாடு, போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேரும்; செக்கில் கட்டிய மாடு நாள் முழுவதும் நடந்தாலும், செக்கையே தான் சுற்றிச் சுற்றி வரும். அதுபோல பகவானை நோக்கி போய்க் கொண்டிருக்க வேண்டும். செக்கு மாடு மாதிரி குடும்பத்தையும், மனைவியையுமே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தால், விமோசனம் ஏது? அதற்காக குடும்பம், மனைவி, மக்கள் என்றால் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதல்ல!

அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்துகொண்டே , இறைவனை தேடுதலையும் ஒரு கடமையாகக் கொள்ளுங்கள். அதற்க்கு முதலில் உங்கள் ஆத்மாவை அறியவேண்டும். அதன் பிறகு உங்கள் பிறவியின் நோக்கம் உங்களுக்கு புலப்படும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_DiiKuX0cUU6TjZVbH_nN3N3ftkAds8cIlr2RaG3TtJHGmWv2x_NS3uRPZArr80T-aCZx_orQUgmNUH_qpGUbBZ1yQerqJXaZ6nD7lNqcmxdDT7RDG3QG1-gATf2q7KyCWx_DVN2SEg4/s320/mookambika-thumb1.png

குடும்ப பாரம் ஒருபக்கம் இருக்கட்டும்; அவர்களுக்காகவே பாடுபட்டு காலத்தை கழிக்க வேண்டாம். இகலோக சுகம் இங்கே கிடைக்கும்; பரலோக சுகம் என்பது அங்கே கிடைக்கும். இங்கே கிடைப்பது நிரந்தரமானதல்ல; அங்கே கிடைப்பது தான் நிரந்தரமானது; நித்யமானது ஒன்றுக்கு முயற்சி செய்யாமல், அநித்யமானதுக்கு ஆசைப்பட்டு வாழ்நாளை வீணாக்க வேண்டுமா?

பெரியோர், மகான்கள், மறுபிறவி என்றாலே நடுங்குகின்றனர். விஷயம் புரியாமலா பயப்படுகின்றனர்? ஏதோ பாதாம் அல்வாவும், பஜ்ஜியும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதா நித்ய சுகம்! பகவானை அடைந்து விட்டால், பசியும் கிடையாது; தாகமும் கிடையாது. அவனுக்கு கைங்கரியம் செய்து கொண்டே சுகப்படலாமே!

முயற்சி செய்யுங்கள், ஏதோ ஒரு ஜென்மாவிலாவது பலன் கிடைக்கும்!

அரை வேக்காட்டு / போலி சாமியார்களை விட்டுத்தள்ளுங்கள். பெரிய , பெரிய ரிஷிகள், சித்தர்கள் , முனிவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் போலே இருப்பது ஒரு அற்புத அனுபவம் தான். நம் ஆன்மாவும் , முடிவில் அதைத்தான் நாடுமோ ? இறைவனை அடைவதுதான் இறுதி என்றால்... இன்றிலிருந்தே இறை வழிபாட்டையாவது தொடங்குவோமே..!!

குழந்தை மருத்துவம்

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால் செய்ய வேண்டிய மருத்துவம்  (நன்றியுடன் livingextra.com)




 கைக் குழந்தைகளுக்கு ஏதாவது வியாதி என்றால், மிக கவனமுடன் கையாளுங்கள். வாய் திறந்து அவர்கள் பேசும் பருவம் வரும்வரை , மிக மிக கவனத்துடன் பராமரிப்பது அவசியம் .

அறிகுறிகளும், பாதிப்புகளும்
* உடலில் இருந்து அதிக அளவில் நீர் உப்புகள், வைட்டமின்கள் வெளியேறுகின்றன.
* சத்துக் குறைபாடு ஏற்படும்.
* உணவில் இருந்து மைக்ரோ மற்றும் மேக்ரோ நுணூட்டச் சத்துகளை திசுக்கள் உறிஞ்ச முடியாமல் போகும்.
* புரோட்டின் சத்தும் வீணாகும்.
* பசி எடுக்காது.
* ரத்த அளவு குறையும்.
* நாடித் துடிப்பும் குறையும்.
* ரத்த அழுத்தம் குறையும்.
* கை, கால்கள் சில்லிட்டுப் போகும்.
* வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும்.
* சிறுநீரகம் பாதிக்கப்படும்.
*ரத்ததில் பொட்டாசியம் அளவு குறைவதால் வயிறு வீக்கம், குடல் வேலை செய்யாத நிலை ஏற்படும்.
* பைகார்பனேட் வெளியேறுவதால், அசிடிமியா (Acidemia) பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிடுவதல் வேகமாகவும், ஆழமாகவும் இருக்கும்.

பரிசோதிக்கும் முறைகள்
பேதியால் பாதிக்கப்ட்ட குழந்தைகளைப் பரிசோதித்து, உடலில் இருந்து நீர் மற்றும் உப்புச் சத்துகள் மிகவும் அதிகமாகக் குறைந்துள்ளதா, மிதமாகக்
குறைந்துள்ளதா, குறையவில்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தை சோர்வாக இருத்தல் அல்லது மயக்கம் அடைதல், குழி விழுந்த கண்கள், வயிற்றுப் பகுதி தோலை இழத்துவிட்டால், மிக மெதுவாகப் பழைய
நிலையை அடைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீர் மற்றும் உப்புச் சத்துகள் மிகவும் அதிகமாகக் குறைந்துள்ளது என்று அர்த்தம்.
குழந்தை நன்றாக விளையாடிக் கொண்டிருத்தல், கண்கள் குழி விழாமல் இருத்தல், வயிற்றுப் பகுதி தோலை இழுத்துவிட்டால், உடனே பழைய
நிலைக்குத் திரும்புதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீர் மற்றும் உப்புச் சத்துகள் குறையவில்லை என்று அர்த்தம்.

சிகிச்சைகள்

பேதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மூன்று வகைகளாகப் பிரித்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.
சிகிச்சை முறை (நீர் குறையாத குழந்தைகளுக்கானது)
திரவ உணவை அதிகமாகக் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, மோர், எலுமிச்சைச் சாறு, இளநீர், பருப்பு நீர்,பால், காய்கறி சூப் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
வழக்கமாக கொடுக்கும் திரவ உணவுடன், ஒவ்வொருதடவை பேதி ஆகும்போதும் கீழ்க்கண்ட அளவு நீகீகு எனப்படும் உப்பு & சர்க்கரைக் கரைசல்
கொடுக்கவேண்டும்.

இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைக்கு 50 மில்லி & 100 மில்லி
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு 100 மில்லி & 200 மில்லி.

தாய்மார்களுக்கான அறிவுரை
1. ORS திரவத்தை கரண்டி அல்லது பாலாடையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும்.
2. குழந்தை வாந்தி எடுத்தால் பத்து நிமிடங்களுக்குப் பிறகு ளிஸிஷி திரவத்தை மீண்டும் கொடுக்க வேண்டும்.
3. பேதி நிற்கும் வரை ளிஸிஷி திரவத்தையும், பிற திர உணவுகளையும் கொடுக்க வேண்டும்.
சிகிச்சை முறை (மிதமான நீர் குறைந்த குழந்தைகளுக்கானது)
ORS திரவத்தை வயதுக்கும் எடைக்கும் ஏற்ப கொடுக்க வேண்டும். முதல் நான்கு மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும்.

கொடுக்க வேண்டிய அளவு
* பிறந்து 4 மாதங்களும், 6 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 200 மில்லி & 400 மில்லி.
* 4 முதல் 12 மாதமும், 6 முதல் 10 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 400 மில்லி & 700 மில்லி
* ஒன்று முதல் இரண்டு வயது வரையும் 10 முதல் 12 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 700 மில்லி & 900 மில்லி.
* இரண்டு முதல் ஐந்து வயது வரையும் 12 முதல் 19 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 900 மில்லி & 1400 மில்லி.
நான்கு மணி நேரத்துக்குப் பிறகு குழந்தையின் நிலையை மீண்டும் பரிசோதித்து அப்போதைய நிலைக்கு ஏற்பட சிகிச்சை அளிக்க வேண்டும்.
குழந்தைக்குத் தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

சிகிச்சை முறை
(மிகவும் அதிக அளவு நீர் குறைந்த குழந்தைகளுக்கானது)
குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொடு சென்று, ரிங்கர் லாக்டேட் என்ற மருந்து நீரை உடலில் ஏற்ற வேண்டும்.
மிகவும் அதிக அளவு சத்துகள் குறையாமல் தடுக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* எப்போதும் சாப்பிடுவதற்கு முன் கை, கால்களைக் கழுவ வேண்டும்.
* கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரைத் தான் குடிக்க வேண்டும்.
* திறந்த வெளியில் கொசுக்களோ, ஈக்களோ மொய்த்த உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது.
* சூடு ஆறிய உணவைச் சாப்பிடக்கூடாது.
* பழைய, கெட்டுப்போன உணவைச் சாப்பிடக்கூடாது.
* டின்னில் அடைக்கப்பட்டுக் கிடைக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது.











மழலைச்செல்வம்

குழந்தை வரம் பெற சில எளிய ஆலோசனை , கை வைத்திய முறைகள்                          (நன்றியுடன் livingextra.com)

 
இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை.சோகம் வாழ்க்கையில் இருக்கலாம் தான். ஆனால், அப்படிப் பட்ட சோகத்தை , நிரந்தரமாக வைத்து விடுவது புத்திர சோகம் . இதனுடைய வலி, வீர்யம் -அதை அனுபவிப்பவர்களை தவிர மற்றவர்கள் புரிந்து கொள்வது கடினம்.
 
தாய்மை இறைவனின் வரப் பிரசாதம். பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. திருமணமாகி, ஒருவருடத்தில், அடிக்கடி உடலுறவு கொண்டும், கருத்தரிக்காமல் போனால், குழந்தையின்மை குறை என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது.

இன்றைக்கு மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேறி விட்டாலும், இன்றும் ஏராளமானோர் குழந்தையின்மை குறைபாட்டுடன் இருக்கின்றனர். அப்படி இருப்பவர்களுக்கு, இந்த கட்டுரை உதவியாக இருக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.

மருந்து கால் - நம்பிக்கை முக்கால் என்பார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றினால் , அவர்களுக்கு நிச்சயம் வாரிசு பாக்கியம் உண்டாகும்.

நமது சமீப காலத்து சித்தர் பெருமான் தவத்திரு . பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த வேற்குழவி வேட்கை பாராயணம் புத்திர தோஷத்தை நீக்கி,சந்ததி விருத்தியும்,குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் திறனுள்ள நல்ல குழந்தைகளை உருவாக்கும். இதைப் பற்றி நமது முந்தைய கட்டுரையில் , ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதைப் படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து படிக்கவும். இது ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த மந்திரம்.

http://www.livingextra.com/2011/06/blog-post_444.html
 
குழந்தையில்லாதவர்களுக்கு மாதவிடாய் ஆன ஐந்து தினங்களிலும் ஒரு வெள்ளைப்பூண்டு சிறிது வேப்பங்கொழுந்து ஒரு சிறிய விரலி மஞ்சள் துண்டு வைத்து அம்மியில் அரைத்து சாப்பிடச்சொல்வார்கள்.

இப்படி சில மாதம் சாப்பிட்டு தீட்டு நின்று கர்ப்பம் தரித்துவிடும்.

குழந்தை வேண்டுவோர் பாலமுருகன் அல்லது முருகக்கடவுளை வணங்கச்சொல்வார்.மேற்படி எளிய முறையில் மருந்து சாப்பிட்ட அனேகருக்கு குழந்தை பிறந்துள்ளது.
சில எளிய பாட்டி வைத்திய முறையும் , பயனுள்ளதாக இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். சித்தர்களின் மூலிகை மருத்துவத்திலும் இதைப் பற்றிய பல குறிப்புகள் கிடைக்கப் பெறுகிறோம்..
அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர குழந்தை பேறு கிடைக்கும்.
 பூனைக்காலி விதை, சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, சூடம், வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து உலர வைத்து, சூரணம் செய்து காலை மாலை இரு வேளை பாலுடன் அருந்தி வர ஆண்மை உண்டாகும்.

நீர் முள்ளி விதை 30 கிராம் , பாதாம்பருப்பு 10 கிராம் , கசகசா 10 கிராம் ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக் காய்ச்சி பாலுடன் சேர்த்துக் குடித்து வர விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

புளிச்ச கீரைகளை,வெங்காயம் சேர்த்து சமைத்து நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

இலவங்கப் பட்டை கஷாயம் செய்து அருந்தி வந்தால் தாதுவிருத்தி உண்டாகும்.

அரச இலைக் கொழுந்தை அரைத்து சிறிது சூடான பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால் விந்துக் குறை நீங்கி விந்து உற்பத்தியாகும்.

செம்பருத்தி பூ உலர்த்திய சூரணத்துடன் முருங்கைப்பூ உலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

கானா வாழை சமூலம், தூதுவ‌ளைப்பூ, முருங்கைப்பூ ஆகியவற்றை ஒரு குவளை தண்ணீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் கலந்து 40 நாட்கள் சாப்பிட‌ தாது பலப்படும்.

முருங்கை, ஆப்பிள், முந்திரி, பாதாம்பருப்பு, உலர்திராட்சை, பேரீட்சை, தேன், நெல்லி, மா, பலா, செவ்வாழை, கொத்தமல்லி, முளைதானியங்கள், திராட்சை, அன்னாசி, தேங்காய்பால் இவைகளை சாறு எடுத்து சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

அத்திப்பழத்தை உலர்த்திப் பொடி செய்து சூரணமாக பாலில் போட்டு சாப்பிட ஆண் ஆண் மலடு அகலும்.

தொட்டால் சிணுங்கி இலையை 15 கிராம் எடுத்து இரவு பாலில் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.

அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து அருந்தி வந்தால் கருப்பைக் கோளாறுகள் குறையும்.

முருங்கைப் பூ பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.


நிலபூசணிக்கிழங்குச் சாறுபிழிந்து, பசும்பால் விட்டு, சர்க்கரை காலை, மாலை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தினசரி ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

செம்பருத்திப் பூவைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி நன்றாக இடித்துத் இரவில் ஒரு சிட்டிகைத் எடுத்து வாயில்போட்டு பசும்பாலைச் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

அரை கைப்பிடிய‌ள‌வு கொத்த‌ம‌ல்லி இலையை வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தாது விருத்தி உண்டாகும்.தொட‌ர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வ‌ர‌ வேண்டும்.

தவசிக்கீரை,முருங்கைக்கீரை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

மாதுளம்பழம் தினமும் இரவு உணவுக்கு பின் சாப்பிட விந்து விருத்தியாகும்.

வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர விந்து வலிமை பெறும்.

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் தினமும் காலையில் வெறும் வயிற்றில்அருந்தி வர விந்து விருத்தியாகும்.

முறைப்படி, யோகாசனங்களை மேற்கொள்ளுவதன் மூலமும் , குறைபாடுகளை சரி செய்ய முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

யோகாசனங்களை மேற்கொண்டால் முழுப்பலனை பெறலாம். புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் ( மீன், வெண்மாமிசம், முட்டைகள்). வெங்காய சாற்றுடன், தேன் / நெய், நெல்லிக்காய் பொடி, பால், வெண்ணை இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டிய யோகாசனங்கள் (முறையாக பயின்ற பின்)
1. சூர்ய நமஸ்காரம்
2. ஹாலாசனம்
3. சிரசானம்
4. பத்த கோனாசனம்
5. கூர்மாசனம்
6. அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம்
7. பரியாங்காசனம்
8. பஸ்சிமோத்ஸானம்
9. மூலபந்தாசனம்
10. சர்வாங்காசனம்
11. புஜங்காசனம்
12. தநுராசனம்
13. உபவிஷ்ட கோனாசனம்
14. கந்தாசனம்
15. சவாசனம்.

கூடிய விரைவில் , குறைகள் நீங்கப் பெற்று - மழலை இன்பம் உங்களுக்கு கிடைக்க , இறைவன் அருள் கிடைக்கட்டும்...!


 

குழந்தையின் அறிவு


நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .

இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .

ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .

எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு :
ஆர்வம் மற்றும் கவனம்

திரும்ப திரும்ப செய்தல்
.

மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் :
explicit & implicit

explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்

implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்

நினைவுத் திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம்


யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரி
தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )


இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்


1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்


2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .

3 . முழு கவனம் மிக அவசியம் .


4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்
Example - news - north ,east,west,south ....

5 . படித்த வுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்

7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை


8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .

9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .

10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துக் கொள்வது நல்லது.